Connect with us

உள்ளூர் செய்திகள்

கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் !

Published

on

 

 

கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் !

கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது. மொத்தம் 32.4 கி.மீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலை 3 பகுதிகளாக அமைக்கப்படுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ), மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

முதல் பகுதி ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 11.80 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கவேண்டிய இடத்தில் இன்னும் 2 கிலோமீட்டருக்கு தான் உள்ளது.

மேலும் இப்பகுதியில் அமைகிற மாதம்பட்டி சந்திப்பு மேம்பால பணிகள் நிறைவேறியுள்ளது. அதே சமயம் மைக்கல் பகுதியில் அமைகிற மேம்பாலம் 40% நிறைவேறி உள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மேம்பாலம் அமையும் மைக்கல் பகுதியில் நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், நிலத்தடியில் உள்ள குழாய்கள், வயர்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் சில எதிர்பாரா சவால்களால் இந்த முதல் பகுதி தாமதம் ஆக காரணங்களாக பார்க்கப்படுகிறது. முதல் கட்ட பணிகள் மொத்தம் 90% நிறைவடைந்துள்ளது.

செப்டம்பர் 2025ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த முதல் பகுதியின் பிரதான சாலையை நவம்பரில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், மேம்பாலம் உள்ளிட்ட முழு முதல் கட்ட பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல் கட்ட பணிகள் நிறைவேறிய பின்னர் தான் மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் வரும் இரண்டாம் பணிகள் துவங்கும். ஆனால் இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் 90%க்கும் மேல் கையகப்படுத்தப்பட்டுவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

Trending