Connect with us

செய்திகள்

ஜி.எஸ்.டி வரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Published

on

நாட்டின் முக்கிய துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன- முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது; பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும்”-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

(இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது)

ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைப்பு; டிராக்டர், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு.

சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு; UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீது வரி கிடையாது சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும்; விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

350Cc இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி; அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18% வரி வசூலிக்கப்படும்

9 ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ வாகனங்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீது தற்போது 18% வரி வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 12% வசூலிக்கப்படும் 4 பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி.

புகையிலை பொருட்கள் மீதான வரி எப்போது அமலுக்கு வரும் என்பதை முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

பிற பொருட்கள் மீதான புதிய ஜிஎஸ்டி வரிகள், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending