Connect with us

செய்திகள்

பிரதமரின் கருத்தை செயலாக்கும் புதிய சமூக ஊடக தளம்

Published

on

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில்முனைவோரும், திரைப்பட இயக்குநரும், 2024 பொது தேர்தலில், கோவை பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட அருண்காந்த், Indiema.in என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகம் செய்தார்.

இது சமூக ஊடகத் தளங்களின் வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையோ அல்லது பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்களையோ மையப்படுத்தாமல், உண்மையான படைப்பாற்றல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருண்காந்தின் நிறுவனமான இன்ஃபோ ப்ளுட்டோ மீடியா வர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Info Pluto Media Works Pvt. Ltd.) இரண்டரை ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது.

படைப்பாற்றல் திறன் கொண்ட, அவசியமான, அறிவுபூர்வமான தகவல்களையும், உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தவும், வர்த்தக உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவும் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் கணக்கு துவங்கும் நபர்கள் அவர்கள் விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதை மட்டும் காண முடியும். ஏதோ ஒரு மென்பொருள் இங்கு அதிகாரம் கொண்டதாக இருக்காது. சமூக வலைதள பயன்பாட்டாளர்களே இங்கு அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த தளத்தில் படைப்பாளிகள் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காக எதை எதையோ பதிவு செய்து, அதன் மூலம் பின் தொடர்பாளர்களை அதிகரிக்கவேண்டும் என்ற வழக்கமான போட்டிக்கு இடம் இல்லை.
மாறாக அவர்களின் படைப்புக்கே மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படும்.

இந்த தளத்தின் அறிமுகத்திற்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அருண்காந்த் Indiema.in-ன் தனித்துவமான செயல்பாடுகளை மேலும் விளக்கினார்.

இதில் கணக்கு துவங்குபவர்கள், பிற படைப்பாளர்களை பின்தொடர வேண்டிய அவசியமின்றி, அவர்களின் படைப்புகளை நேரடியாகப் பார்வையிடலாம். ஒரு படைப்பாளர் தான் உருவாக்கிய படைப்புக்களை அதிகப்படியான பார்வையாளர்களிடம் எடுத்து செல்ல கட்டணம் செலுத்தினால் தான் முடியும் என்ற நிலையை இந்த தளம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இதில் அனைவரும் இயல்பாகவே இணைக்கப்பட்டுள்ளனர், என அவர் தெரிவித்தார்.

இந்தத் தளத்தில், படைப்பாளர்கள் தங்கள் பதிவுகள் எந்த பிரிவின் கீழ் வருகின்றன என்பதை கட்டாயம் வகைப்படுத்த வேண்டும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த பதிவுகள் அவர்களிடத்தில் எளிதாக சென்றடையும்.

பயனர்கள் தாங்கள் விரும்பாத தலைப்புகளை எளிதாக குறித்து வைத்துக்கொள்ள வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பிடிக்காத எந்த ஒரு படைப்பும் அவர்கள் கண்ணில் படாத படி செய்யமுடியும். இதை ‘நெகடிவ் ஃபில்டர்கள்’ என அருண் அழைக்கின்றார்.

இந்த தளத்தில் படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அழகான தலைப்பும், விரிவான பதிவும் இங்கு முக்கியத்துவம் பெறும். அதற்கு துணையாக படங்கள், விடியோக்கள் இருக்கும். இதில் படங்கள், வீடியோக்கள் என்பது பதிவுகளில் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படாது. லிங்க்-குகளாகவே அவை இருக்கும். ஒரு பதிவில், படைப்பாளர் யார் என்பது முதலில் தெரிவிக்கப்படாது. ஒரு பயனர் தான் விரும்பிய தலைப்பின் கீழ் உள்ள படைப்புக்களை பார்வையிட முடியும். அது பிடித்திருந்தால், படைப்பாளரின் அடையாளம் அதன் பின் வெளிப்படுத்தப்படும்.

ஒரு பதிவு இந்த தளத்தில் அதிகபட்சம் 30 நாட்கள் இருக்கும். அதை உருவாக்குபவர்கள், 1 முதல் 30 நாட்கள் வரை அதன் வாழ்நாளை முடிவு செய்யலாம். இதன் மூலம், தேவையற்ற பழைய தகவல்கள் பயனர்களுக்கு சென்றடையாது. மேலும் இங்கு புதிய படைப்புகளும் தகவல்களும் தொடர்ந்து பகிரப்படுவது உறுதி செய்யப்படும்.

ஒரு படைப்பாளியின் தன்னம்பிக்கையை சிதைக்கும் நோக்கில் வீசப்படும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோலிங் எனும் கிண்டல்களுக்கு இந்த தளத்தில் இடமில்லை. எந்த பதிவுகளுக்கும் பொதுவான கருத்துப் பகுதி வழங்கப்படுவதில்லை. ஒருவேளை பயனர்கள் ஒரு பதிவை பாராட்ட விரும்பினால், அதை குறிப்பிட்டு தங்கள் சொந்தப் பதிவை உருவாக்கலாம்.

இதில் பணம் செலுத்தி ஒரு படைப்பை பயனர்கள் முன்பு கொண்டு செல்லமுடியாது. மக்கள் விரும்பும் தலைப்புகளை மட்டுமே அவர்கள் காண முடியும். இந்தத் தளத்தில் உள்ள பதிவுகளை பார்வையிட எந்தக் கட்டணமும் இல்லை. இருப்பினும், படைப்பாளராக பதிவுகளை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ. 1000 சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்னாள் மாணவர் சங்கங்கள், சமூக ஆர்வல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் கூட தங்களுக்கான குழுக்களை இதில் ஏற்படுத்தி கொள்ள முடியும். மேலே கூறிய அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு தனிப்பட்ட நெட்வர்க்கையும் அவர்கள் உருவாக்கி அதன் கீழ் பிரிவுகளை மிக எளிதாக அமைக்க முடியும்.

இந்த தளம் கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அர்த்தமுள்ள சமூக ஊடக அனுபவத்தை நாடும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“2025 சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து ஒரு சமூக வலைத்தளம் உருவாக வேண்டும் என இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னதாகவே நாங்கள் இதற்கான முயற்சியை முன்னெடுத்தோம். இப்போது இதை உருவாக்கிவிட்டோம். இதில் மோடி அவர்கள் ஒரு கணக்கு துவங்கி எங்களுக்கு ஆதரவு கொடுப்பாரா?” என எதிர்பார்ப்பதாக அருண்காந்த் கூறினார்.

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக்கான நிறுவனம் விருது!

Published

on

பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (NITTTR) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், இந்த விருதை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 58 வது ஆண்டு விழாவில் பெற்றுக்கொண்டது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ம.அசோக் மற்றும் விரிவுரையாளர் G.கதிரேஸ்குமார் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ம.மாணிக்கம் மற்றும் தலைவர் மா.ஹரிஹரசுதன் ஆகியோர் இச்சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue Reading

செய்திகள்

அபராத தொகையைக் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்!

Published

on

விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை.

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராதம் மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் முறையும் விதிக்கப்படுகிறது.

அதன் அபராதத்தொகையே இணையத்தளம் மூலம் கட்டும் வசதி இருந்தாலும் அதை செலுத்த பலரும் தவறுவதால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை சுமார் ரூ.300 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய நடைமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

Trending