Connect with us

Entertainment

ராபின் வுட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை! சாக்ஷி அகர்வால்!

Published

on

உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி?

என்னுடைய இளம் வயது பள்ளிப் பருவத்தில் நான் ஐஏஸ் ஆக விருப்பப்பட்டேன்,ஆனால் ஐ டி ததுரையின் அசுர வளர்ச்சியால் என் மனம் மாறியது பின்னர் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்தேன். எனது வாழ்க்கையில் மாடலிங் மற்றும் சினிமா இணையும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இன்று நிஜமாகி இருக்கிறது தற்போது தமிழ்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். இந்த வாழ்கை எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல அனுபவம்.

மார்க்கெட்டிங் துறையில் இருந்து சினிமாவுக்கு மாறியது எப்படி ?

எம்.பி.ஏ படிக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது இன்போசிஸ்யில் நடந்த பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டேன் அதன் பின்னர் கொச்சியில் நடைபெற்ற மற்றோரு பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது பின்னர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மார்க்கெட்டிங் வேலையை விட்டு விட்டு இதில் இறங்கி விட்டேன்.

முதல் படம் முதல் அனுபவம் ?

முதன் முதலாக நடித்தப் படம் யுகன் இது தமிழ் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. காரணம் சினிமாவைப் பற்றி ஒன்னும் தெரியாத நிலையில் கேமரா அனுப்பவும் இல்லாமல் நடித்த முதல் படம்எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது சிறந்த அனுபவத்தை தந்தது.

நீங்கள் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளைக்கு என்ன குவாலிட்டி இருக்கணும் ?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். நல்ல நண்பனாகவும், இருவரும் புரிந்து நடக்கும் மனிதராகவும் இருந்தாலே வாழ்கை எளிதாகயும்,அழகாகவும் அமையும்.

என்ன மாதிரியான கேரக்டர் பண்ணனும்னு ஆசை ?

உண்மையை சொல்லனும்னா இந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் என்று ஆசையெல்லாம் இல்லை. அனைத்து வகையான காதாபாத்திரதில் நடிக்க வேண்டும், முக்கியமாக கிராமப்புற கதாபாத்திரம், பக்கா திருநெல்வேலி பொண்ணு கேரக்டர் அதேசமயம் அதிரடி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இதனை தவிர்த்து பெண் ராபின்வுட் கேரக்டர் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுடைய பிட்னெஸ் ரகசியம் (டையேட் பிளான் ) என்ன ?

எனக்கு எப்பொழுதும் பிட் ஆக இருப்பது பிடிக்கும், டயட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவள் நான். என்னைப் பொறுத் தவரையில் உடலுக்கான பிட்னெஸ் தாண்டி நம் மன நிம்மதிக்கான பிட்னெஸ் தேவை . ஓவ்வொரு முறையும் உடல்பயிற்சி செய்யும் பொழுது எனது மனம் நிம்மதியும் என்மேல் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் தொடமாட்டேன். அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வேன், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் நன்றாக சாப்பிடுவேன் அதுக்கு ஏற்றாப்போல் உடல்பயிற்சி செய்வேன் இதுதான் எனது பிட்னெஸ் ரகசியம் .

யாருடைய ரியல் கதாபாத்திரத்தில்நடிக்க ஆசை?

நிஜ கதாபத்திரம்னா… பெண்களை மையப்படுத்தி, பெண்களின் வீரத்தைப் போற்றும் விதமாக இருக்கும் பாத்திரம், உதாரணமாக வேலுநாச்சியார் போன்ற பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை.

லைப்ல மறக்க முடியாத அனுபவங்கள் ?

காலா படத்தில் சுமார் 55 நாட்கள் நடித்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. ரஜினி சார், ரஞ்சித் சார் மற்றும் பட குழுவினர்களுடன் இருந்த தருணம் மறக்க இயலாதது .

ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவம் ?

என்னுடைய இளம் வயது கேரியரில் உலக சூப்பர் ஸ்டார்களான ரஜினி சார், மற்றும் அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே மிகப்பெரிய அனுபவசாலிகள் இவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் ஒழுக்கம், வேலையில் ஆர்வம், வேலை மீது இருக்கும் பற்று இதை அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்கள், மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும் கீழே இருப்பவர்களை மதிக்க தெரிந்தவர்கள். இவர்களுடன் நடித்த அனுபவம் என வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

பிக் பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் ?

பிக் பாஸ் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதற்கு பிக் பாஸ்க்கு நன்றி சொல்லவேண்டும். அது மட்டும் இன்றி நிறைய ரசிகர்களைப் பெற உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் என்னைப் பற்றி அறிய வழி செய்தது. பிக் பாஸ் பொருத்தவரையில் எனக்கு’ கிடைத்த அனுபவம், எல்லோரும் நம்மை விரும்ப மாட்டார்கள் எல்லோரும் நம்மை வெறுக்க மாட்டார்கள் , நாம் செய்யும் விஷயம் சிலருக்கு சரியா இருக்கும், சிலருக்கு தப்பாக இருக்கும், இந்த உலகத்தில் எது சரி எது தப்புனு யாருக்கும் தெரியாது, ஓவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும். செலிபிரிட்டியாக வளரும் பொழுது பல நிறை குறைகளைதாண்டிதான் வர வேண்டும் என்பதயும் கற்றுக் கொடுத்தது இந்த பிக் பாஸ்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending