Connect with us

கோயம்பத்தூர்

கோவையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை கலெக்டரிடம் அதிமுக மனு!

Published

on

கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,
பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அணைகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை தூர்வார வேண்டும் ,புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியும், லாரிகள் மூலமும் பொதுமக்களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்,பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கடைக்கோடி கிராமங்களான காபுலிபாளையம், காட்டம்பட்டிபுதூர், தாசநாயக்கன்பாளையம், வடசித்தூர் மற்றும் பொள்ளாச்சி மேற்குபகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. மற்ற கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற தொகுதிகளிலும் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்,சீரான குடிநீர் விநியோகத்தை கருத்தில் கொண்டு, நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ,கோவை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,ஆணைமலை ஒன்றியம் கம்பாளப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளை மீண்டும் அனைத்து வார்டுகளிலும் வைத்து, தினசரி குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

,தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊர்நத்தம் (பூர்வீக சொத்து) ZERO Value ஆக மாறி இருப்பதால் அப்பகுதி மக்களால் தங்களின் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடிவதில்லை, பெயர் மாற்றம் செய்ய, பத்திரப்பதிவு செய்ய முடிவதில்லை. ஆகவே ZERO Value மதிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற , பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி திரு. வி. ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. PRG Arunkumar, திரு. Amman K Arjunan MLA, திரு. ஏ.கே.செல்வராஜ், திரு. டி.கே. அமுல் கந்தசாமி, ஆகியோர் என அதிமுக சார்பாக கோரிக்கை விடுத்தனர்.

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

Trending