Connect with us

அரசியல்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய சில அம்சங்கள்!

Published

on

வறுமையை ஒழிக்கும் தாயுமானவர் திட்டம்! தமிழ்நாட்டில் பன்முக வறுமை குறியீட்டின் கீழ் உள்ள 2.2% ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்! அரசு கூர்நோக்கு இல்லங்கள் இனி ‘குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை’ என்று பெயர் மாற்றப்பட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் பகுதிகளின் கடலோரங்களில் 65 இலட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வும், ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச் சுவடுகளைத் தேடி கேராளவில் உள்ள முசிறி, ஒடிசாவில் உள்ள பாலூர், ஆந்திராவில் உள்ள வெங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்! அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் ரூ 1000! 2024 – 2025 நிதியாண்டிற்கு ரூ 360 கோடி ஒதுக்கீடு!

கலைஞரின் கனவு இல்லம்! 2024 – 2025 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் புதிய வீடுகள்! ரூ 3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

கல்வி பெற்ற சமூகம் புதிய சிந்தனைகளையும், சமூகநீதி உலகையும் உருவாக்கும் சமூகமாக திகழும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ 44,042 கோடி நிதி ஒதுக்கீடு!

மேலும் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் மேலும் 3 புதிய தோழி விடுதிகள்!

கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா! தூத்துக்குடியில் புதிய விண்வெளி தொழில் & உந்துசக்தி பூங்கா!

வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000 புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்!

500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு!

 

 

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending