Connect with us

நிகழ்ச்சிகள்

கோவையின் மிகப்பெரிய மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்!

Published

on

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது .  இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த  மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும்.  2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார். பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம்.

ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு  ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ. 25,000 ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 ஆகும், அதேபோல 10 கி.மீ திறந்த பிரிவில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத் தொகையானது முறையே ரூ. 15,000 ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ஆகும்.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெடரன்களுக்கு, அரை மாரத்தான் ஓட்டத்திற்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு பரிசுத் தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும்.  10 கி.மீ ஓட்டத்திற்கு 7,500 மற்றும் 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. வி. நௌஷாத், தனது உற்சாகத்தைத் தெரிவித்து கூறுகையில் “கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுக்கு ஆதரவளிக்க கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுடன் கைகோர்த்து 11 வது பதிப்பு கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த கூட்டிணைவு நிரூபிக்கிறது. உடல் திடம் மற்றும் நல்வாழ்வுக்கான நடைப்பயிற்சிக்கு ஆதரவாளரான வாக்கரூ, எங்கள் பிராண்டின் நோக்கப்பார்வையான (Point of View – POV) – “Walk With Walkaroo,” -க்கு இணங்க, இந்த நிகழ்வில் கூட்டு சேருவதில் பெருமிதம் கொள்கிறது.

பல ஆண்டுகளாக, நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்கி பங்காளர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவைப் பெற்று, கோயம்புத்தூர் மாரத்தான் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக வளர்ந்துள்ளது. நாங்கள் 11 வது பதிப்பைத் தொடங்கும்போது, எங்கள் பணியானது பந்தயத்திற்கு அப்பாற்பட்டு புற்றுநோய்க்கு எதிரான போராக முன்னேறுகிறது. புற்றுநோயைத் தடுப்பது, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வு முயல்கிறது. எங்கள் தேசிய பிரச்சாரத்தின் கருப்பொருளான “#WalkindiaWalk” ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கான வாக்கரூவின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. வாக்கரூவானது, உடற் திடம் மற்றும் நல்வாழ்வுக்காக நடைபயிற்சி செய்வதை உறுதியாக நம்புகிறது, மேலும் இந்த மாரத்தான் மூலம், புற்றுநோய்க்கு எதிரான போருக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்று கூறினார்.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் டி.பாலாஜி கூறுகையில் “கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி ஒரு முக்கிய நிகழ்வாகவும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் பிராண்டு தூதராகவும் மாறியுள்ளது. கோவிட் நெருக்கடிகள் இருந்த சமயத்திலும், நாங்கள் 2 மெய்நிகர் மராத்தான்களை நடத்தி, இடைவெளி இன்றி அதன் 11 வது பதிப்பில் நுழைந்துள்ளோம், இது கோயம்புத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளது. நகரின் குடிமக்கள் மற்றும் நகரத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாரத்தான் ரன்னர்களும் கூட இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Published

on

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா 17.06.2026 (புதன்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந் தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

40 ஆண்டுகால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரியர்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார். விழாவில் 2, 250 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

ஃபேஷன் கலெக்டிவ் நடத்திய குயின் & பிரின்சஸ் கோவை 2026! பிரம்மாண்ட அழகுப் போட்டி

Published

on

கோவை: புளோரா வெடிங்ஸ் & ஈவென்ட்ஸின் ஒரு அங்கமான ‘ஃபேஷன் கலெக்டிவ் கோவை’, கோவையில் உள்ள மெர்லிஸ் அரங்கில் “குயின் கோவை & பிரின்சஸ் கோவை 2026” அழகுப் போட்டியை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதன் நிறுவனரும் இயக்குநருமான ரேஷ்மா ஸ்ரீஜய் தலைமையில், பெண்களின் தனித்துவம் மற்றும் பெண்மை போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போட்டியில் திருமதி அஷ்வினி சுந்தரராஜு ‘குயின் கோவை 2026’ பட்டத்தையும், ஸ்மிதா ராஜசேகரன் ‘பிரின்சஸ் கோவை 2026’ பட்டத்தையும் வென்றனர். பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டி சிறப்பித்தார்.

அறிமுகச் சுற்று, பாரம்பரிய உடைச் சுற்று மற்றும் கேள்வி-பதில் சுற்றுகளில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். டிஎன்சிடி டெவலப்பர்ஸ் (TNCD Developers) முதன்மை ஸ்பான்சராகவும், சுமங்கலி ஜூவல்லர்ஸ் மற்றும் ஷ்லோகா இணை ஸ்பான்சர்களாகவும் செயல்பட்டனர்.நடுவர் குழுவில் டாக்டர் ராஜ்ஸ்ரீ பதி, டாக்டர் தாமோதர் ராவ், நடனக் கலைஞர் லாவண்யா சங்கர், சரண்யா ரெங்கராஜ், டாக்டர் அபிராமி மற்றும் பிரசன்னா ஸ்ரீவத்சன் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிகழ்ச்சியைப் பெரும் வெற்றியாக்கிய அனைவருக்கும் ரேஷ்மா ஸ்ரீஜய் நன்றி தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல் அறிமுகம்

Published

on

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. கண்ணன், IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமையான “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் , இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை எளிதில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

அதனை கருத்தில் கொண்டு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய விழிப்புணர்வு முயற்சியாக இந்த “ஸ்பின் வீல்” வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த முயற்சியின் மூலம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட தீவிர நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்றார்.

Continue Reading

Trending