Connect with us

Entertainment

களைகட்டிய பொன்னியின் செல்வன்- 2 விழா!

Published

on

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது . இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், மூத்த நடிகர், நடிகைகள், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் என ஒட்டு மொத்த திரை நட்சத்திர்டங்களும் கலந்து கொண்டு இந்த விழாவை திருவிழாவாக மாற்றி அமைத்தனர்.

இந்த சிறப்பான தருணத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிம்பு, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு, ரேவதி, ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் பாரதி பாஸ்கரும் மேடையேறி பொன்னியின் செல்வனில் அதிகம் தெரிவது காதலா, வீரமா என குட்டி பட்டிமன்றத்தை நிகழ்த்தினர் அனைவரையும் ரசிக்க வைத்தனர்.

சுஹாசினி பேசும் போது , “மணிரத்னம் மிகவும் ரொமான்டிக்கான நபர். அவருடைய பர்மனனெட் ஹீரோயின் நான். அவரது படத்தில் வருவது போன்று அவரது வாழ்விலும் உள்ளது. நாயகன் எனக்கு மிகவும் பிடித்த படம் . அதற்கு பின் தற்போது பொன்னியின் செல்வன் தான் பிடிக்கும்” என்றார்.

விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன்.

இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். என தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பேசுகையில் “எனது குரு மணிரத்னம், கமல்ஹாசன் இங்கு இருக்கிறார்கள். பதட்டமாக உள்ளது. நான் கடினமான காலகட்டத்தில் இருக்கும்போது என்னை நம்பி படம் கொடுத்தவர் மணிரத்னம். என்னை பொறுத்தவரை மணிரத்னம் சின்ன குழந்தை. ஒரு விஷயம் வேண்டுமென்றால் விடாமல் முயற்சி பண்ணி முடித்துவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தற்போது நான் காலையில் படப்பிடிப்புக்கு எழுந்து போகிறேன் என்றால் அதற்கு மணிரத்னம் தான் காரணம். சுபாஸ்கரன் நல்ல மனிதர். ஏ.ஆர். ரகுமான் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்து தல படம் நேற்றுதான் பார்த்தேன். பிண்ணியெடுத்துவிட்டார். அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார். விக்ரம் தங்கலான் படத்தில் சூப்பராக பண்ணியிருக்கிறார். மற்றவர்கள் கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

இன்னும் இரண்டு பாகங்கள் எடுங்கள் நான் பார்ப்பேன். நாளைக்கு பத்து தல ரிலீஸ் என்பதால் பதற்றமாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். குந்தவையா நந்தினியா என்ற கேள்விக்கு இரண்டு கண்களில் எந்த கண்ணு என்று கேட்டால் எப்படி. எந்த கண்ணை மூடவேண்டும் என்று நான் பாத்துக்கறேன்” என்றார்.

விக்ரம் உடன் நடிப்பது பெருமை – ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய், “வணக்கம். இங்கு வந்திருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் எல்லோருக்கும் நன்றி” என்று தமிழில் பேசினார். “இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றி. நந்தினியாக முதல் முதலில் கேமரா முன் நின்றதில் இருந்து இப்போது வரை நான் உங்களது மாணவி என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நந்தினி அற்புதமான கதாபாத்திரம். இசை கலைஞர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய கைதட்டல் கொடுக்க வேண்டும் இவ்வளவு நேரம் நம்மை சந்தோஷப்படுத்தியதற்கு. விக்ரம் உடன் நடிப்பது பெருமை” என்றார்.

நான் காதல் செய்து இரண்டு திருமணம் செய்தவன் – சரத்குமார்

நடிகர் சரத்குமார், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்கு முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன். அதுவும் காதல் காட்சி. எனக்கு காதல் வராது. ஐஸ்வர்யா ராய் உலக அழகி அவரது கையை பிடித்து எப்படி பேசுறது என்று தயக்கம் எனக்கு. நான் காதல் செய்து இரண்டு திருமணம் செய்தவன். என்னைப்பார்த்து உனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியுமா என்றார். உலக அழகியை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பை மணிரத்னம் கொடுத்தார் அவருக்கு நன்றி. இதை 5 பாகமாக எடுத்து இருக்கலாம். பெரிய பழுவேட்டரையர் காதலை சொல்லியிருக்கலாம். இப்பாகத்தையும் மிகப் பெரிய வெற்றி படமாக்குங்கள்” என்றார்.

மணிரத்னத்தை பார்த்து பொறாமை – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், “சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள். சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலது கைவிட்டும்போனது. இந்த படம்போன்று. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது.

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை” எனப் பேசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending