Connect with us

செய்திகள்

போட்டி முடிந்ததும் மோதிய கம்பீர் – விராட் கோலி!

Published

on

இன்றும் நினைவில் நிற்கும் அளவுக்கு புகழ் பெற்ற ஒன்று. பல்வேறு நாட்டு வீரர்களுக்கு இடையே நடக்கும் மோதல் வேறு.. ஆனால், சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்த ஒரே நாட்டு வீரர்கள் மோதியது இந்திய ரசிகர்களை வெகுவாக பாதித்தது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கம்பீர் கேப்டனாகவும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விராட் கோலியும் கேப்டனாக இருந்தனர். அந்த ஆண்டு ஒரு போட்டியில் பெங்களூருவின் வெற்றிக்கு 11 ஓவர்களில் 80 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 35 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி, கொல்கத்தா வீரர் பாலாஜியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் கம்பீர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கோபமடைந்த கோஹ்லி, கம்பீரை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பதிலளித்த கம்பீர், கோஹ்லியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரு வீரர்களும் நடுவர்களால் வெளியேற்றப்பட்டனர். கம்பீர் தற்போது ஓய்வு பெற்று லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் கோஹ்லி விளையாடாதபோது, ​​அவரை கம்பீர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023ல் பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட் அணி வெற்றி பெற்றது. கம்பீர் உதட்டில் விரலை வைத்து பெங்களூரு ரசிகர்களை நோக்கி சைகை செய்தார். இதற்கு பதிலடியாக நேற்றைய போட்டியில் விக்கெட் விழுந்ததும், தட்டில் விரலை வைத்து லக்னோ ரசிகர்களை நோக்கி விராட் கோலி சைகை செய்து கம்பீருக்கு பதிலளித்தார்.
பின்னர் போட்டி முடிந்ததும் கம்பீருக்கும், கோஹ்லிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கம்பீர் ஆவேசமாக கோஹ்லியை அணுகி வாக்குவாதம் செய்தார். இதைப் பார்த்த சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விளக்கினர்.

இது ஐபிஎல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கோஹ்லி மற்றும் கம்பீர் இருவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டதன் விளைவாக, விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending