Connect with us

Uncategorized

About Us

Published

on

Welcome to E-Behind, a digital magazine that has been delivering high-quality content to readers for the past three years. We are dedicated to providing our readers with insightful and informative articles on a variety of topics, including technology, business, lifestyle, and more.

At E-Behind, we believe that knowledge is power, and that’s why we strive to create content that informs, educates, and entertains our readers. Our team of experienced writers and editors work tirelessly to produce articles that are well-researched, thought-provoking, and engaging.

Over the past three years, we have covered a wide range of topics, from the latest trends in technology to the most pressing issues facing the business world. We have interviewed industry experts, analyzed emerging trends, and provided valuable insights into the world around us.

Our digital platform allows us to reach readers all over the world, and we take pride in the fact that our articles have been read and shared by people in every corner of the globe. We are committed to providing our readers with a seamless reading experience, whether they are accessing our magazine on their desktop, tablet, or Smartphone.

As we look to the future, we are excited about the possibilities that lie ahead. We will continue to provide our readers with high-quality content that informs and educates, and we will continue to explore new ways to engage with our audience.

Thank you for being a part of our journey so far, and we look forward to sharing many more years of insightful and informative content with you.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

பத்து இலட்சம் மரங்களைக் கடந்து சிறுதுளி அமைப்பு சாதனை படைத்துள்ளது!

Published

on

சிறுதுளி அமைப்பானது 23 வருடங்களாக, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னிறுத்தி, சிறுதுளி சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் தாலுகாவில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பு, ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிதி உதவியுடன் 10,000 மரக்கன்றுகளை ‘பெரியம்மன் கோவில் வனம்’ என்ற திட்டத்திலும், புல் மெஷின்ஸ் பிரைவேட் நிதி உதவியுடன் 7500 மரக்கன்றுகளை ‘கே.பி.கே. வனம்’ என்ற திட்டத்திலும் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளம் அதிகரிக்கும் நோக்கில் முக்கியமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி அன்னூர் பகுதியில் பசுமை வளத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமூக பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு நிகழ்வில், முதன்மை விருந்தினராக திரு. சங்கேத் பல்வந்த் வாகே, இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் சிறப்பு விருந்தினராக  உஷா நந்தினி, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையர் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். மேலும் ஜே.எஸ் ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா தனியார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (நிதி துறை) ஷ்ரவன் சேனாபதி, புல் மெஷின்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சிறுதுளி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விழாவின் சிறப்பு பங்கேற்பாளர்களாக உள்ளூர் பங்குதாரர்கள், நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியின் 30 மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) மற்றும் எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து (மேலாண்மை ஆய்வுகள் துறை) 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இத்திட்டங்களுடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு மொத்தமாக 10,00,000 மரங்களை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 இடங்களில்  நடவு செய்யப்பட்டு பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இத்தகைய பசுமைத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர், நீர்வளத்துறை, வனத்துறை, கோவை மக்கள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிதி ஆதரவாளர்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாகவே இச்சாதனையை சிறுதுளி அமைப்பு செய்துள்ளது.

Continue Reading

Uncategorized

மைக்ரோலேண்ட் அறக்கட்டளை நீலகிரி ப்ரொவிடன்ஸ் கல்லூரியில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியது!

Published

on

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வரும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, நீலகிரியில் உள்ள ப்ரொவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் கணினி மற்றும் தரவு அறிவியல் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் புதிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.இந்த முன்னெடுப்பு நீலகிரி பிராந்திய மாணவர்களின் கற்றல் முறை மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதில் அறக்கட்டளை கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் உறுதிப்படுத்துகிறது.

இந்த புதிய வசதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “இத்தகைய டிஜிட்டல் கற்றல் தளங்கள் மாணவர்கள் கல்வியை அணுகும் முறையையே மாற்றியமைக்கும். பாடப்புத்தகங்களைத் தாண்டி செய்முறை விளக்கம் மற்றும் நேரடி அனுபவம் மூலம் மாணவர்கள் கற்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்விக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. இது நீலகிரியின் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாகும்,” என்று குறிப்பிட்டார்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

ப்ரொவிடன்ஸ் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மேம்பாட்டில் ஒரு தரவு ஆய்வகம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஸ்டுடியோ ஆகியவை அடங்கும்.மாணவர்கள் தரவு பகுப்பாய்வு திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நவீன டிஜிட்டல் கருவிகளை நிஜ உலகச் சூழல்களில் பயன்படுத்தவும் இது உதவும்.இதன் மூலம் மாணவர்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நேரலையில் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற முடியும்.

மாணவர்களுக்கு மட்டுமின்றி, கல்லூரி பேராசிரியர்களும் இந்த வசதிகளை அன்றாடக் கற்பித்தலில் சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகளும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் கல்விப் பணிகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதை மைக்ரோலேண்ட் அறக்கட்டளை உறுதி செய்கிறது.

கல்லூரி முதல்வர் டாக்டர் சிஸ்டர் வி.ஜே. ஷீலா பேசுகையில், “மைக்ரோலேண்ட் அறக்கட்டளையுடனான எங்களது முந்தைய உறவு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மூலம் பலருக்கு உதவியது. தற்போது இந்த டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அன்றாட கற்றல்-கற்பித்தல் முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்,” என்றார்.

மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் கல்பனா கர் கூறுகையில், “நீலகிரி பிராந்தியத்தில் நீண்டகால அடிப்படையில் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். சமூகத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியே இந்தத் திட்டமாகும்,” என்று தெரிவித்தார்.புவியியல் அமைப்பு கல்விக்கான தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, நீலகிரி சமூகத்தின் எதிர்காலத் தேவைகளுக்கான திறன்களை வளர்ப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது

Continue Reading

Uncategorized

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை!

Published

on

கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூறியதாவது :

கடந்த 9 ஆண்டுகளாக ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுவருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருவதாகவும் தெரிவித்தனர்.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பாதகங்களை குவித்துள்ளனர்.

ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், ஈக்வைன் ட்ரீம்ஸ் வீரர்கள் தங்களது நுட்பமான துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
மிக இளம் வயதினராக இருந்தபோதிலும், மைதானத்தில் அவர்கள் காட்டிய தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் அவர்கள் போட்டியை எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டது.

இவர்களின் இந்த வெற்றி, தனிப்பட்ட திறமையை மட்டுமின்றி, ஈக்வைன் ட்ரீம்ஸ் வழங்கிய கடுமையான பயிற்சி மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை வீரர்களின் அர்ப்பணிப்பு, அதிகாலை நேரப் பயிற்சிகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குழுவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், தமிழக இளம் விளையாட்டு வீரர்களிடையே குதிரையேற்ற விளையாட்டு அதிகரித்து வருவதையும், தேசிய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு கூடி வருவதையும் இந்தப் பதக்கங்கள் பறைசாற்றுகின்றன.

இந்த வெற்றியின் மூலம் ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் எதிர்காலப் போட்டிகளுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய சக்தி பாலாஜி மற்றும் பாரதி, குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவதிலும், பதக்கங்களை குவிப்பதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை ஈக்வைன் ட்ரீம்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருவதாக அவர்கள் கூறினர்.

Continue Reading

Trending