Connect with us

செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து: விடியற்காலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Published

on


கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலில் முதலில் விபத்துக்குள்ளானது. ; மாற்று வழித்தடத்தில் 38 ரயில்கள் இயக்கம்!

ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு தமிழக அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

• ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து, கொல்கத்தாவில் இருந்து 101 பயணிகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டனர்

• 17 பேர் பயணம் செய்யவில்லை, 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

14 பேர் காயமடைந்துள்ளனர்- 09 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

கோவா மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா ரத்து

பிரதமர் மோடி இன்று காலை ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு. இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன

வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து!

இந்தியாவை புரட்டிப்போட்ட ஒடிசா ரயில் விபத்து! ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து 1999 முதல் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1999 ஆம் ஆண்டு, அசாமின் கைசல் பகுதியில் 2,500 பேருடன் சென்ற 2 ரயில்கள் மோதிக்கொண்டன. விபத்தில் 285 பயணிகள் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்! ரயில் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார் - தமிழக அரசு ஹெல்ப்லைன் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு044 2859 3990, 94458 69843

Entertainment

கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

Published

on

கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில், இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி நடைபெற உள்ள இதில் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கண்ணன், ராக சங்கமம் அமைப்பின் துணை செயலாளர் ஆனந்த், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் சங்க தலைவர் சாமுவேல் ராஜன், பொருளாளர் வெற்றிவேல்,உள்ளிட்டோர் பேசினர்..

“இசையால் இணைவோம், இசை கலைஞர்கள் வாழ்வினை காப்போம்” என்ற உன்னத நோக்கத்தோடு, நலிவடைந்த இசை கலைஞர்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும்,
இதில், பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னனி இளம் பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..

குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைத்து நடத்த இருப்பதாகவும்,கோவையில் உள்ள இசை பிரியர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி மாலை ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என நம்பிக்கை தெரிவித்தனர்…

Continue Reading

கோயம்பத்தூர்

இந்தியாவின் முதல் மனித சக்தி நீர்மூழ்கிக் கப்பல்: குமரகுரு மாணவர்கள் சாதனை

Published

on

கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி (INS Agrani) செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் (6th Element Engineering) நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்தப் படகை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை அன்புடன் வரவேற்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அக்ரானி (INS Agrani) கப்பலின் செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளுடன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.டீம் சீ சக்தி (Team Sea Sakthi) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள் அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்றும் மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்படுவார்கள் என்றும் கூறியதுடன், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.மேலும் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக்கின்றன எனவும் இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது.மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (European International Submarine Races – eISR) பங்கேற்க உள்ளது.உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண்டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Continue Reading

செய்திகள்

திருநெல்வேலி ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Published

on

திருநெல்வேலி மாவட்டம், ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 நிகழ்ச்சி “Inspired by Nature. For Climate. For Our Future.” என்ற தலைப்பில் தமிழன் சிறகுகள் – இந்திய அரசு (MY Bharath கேந்த்ரா) சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு. எல். ஞானச்சந்திரன், அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆர். மதிவாணன் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் திரு. பி. வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக உடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டதுடன், 210 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Continue Reading

Trending