Connect with us

Entertainment

விஜய்யின் 68வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு!

Published

on

விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டார். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லியோ விஜய்யின் 67வது படம் என்றாலும், வெங்கட் பிரபு இயக்கும் படம் விஜய்யின் 68வது படமாகும். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. ‘தளபதி 68’ என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். இது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் சுரேஷின் 25வது படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தது. அடுத்து வரவிருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

லியோ இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – 600 028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, அதன் பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ் அக்கா மாசிலாமணி, சென்னை – 28 பாகம், கான்புரா, மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்களை இயக்கினார்.

நாக சைதன்யா நடித்த வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் விஜய்யின் அடுத்த படத்திற்கு வெங்கட் பிரபு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

Published

on

கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில், இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி நடைபெற உள்ள இதில் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கண்ணன், ராக சங்கமம் அமைப்பின் துணை செயலாளர் ஆனந்த், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் சங்க தலைவர் சாமுவேல் ராஜன், பொருளாளர் வெற்றிவேல்,உள்ளிட்டோர் பேசினர்..

“இசையால் இணைவோம், இசை கலைஞர்கள் வாழ்வினை காப்போம்” என்ற உன்னத நோக்கத்தோடு, நலிவடைந்த இசை கலைஞர்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும்,
இதில், பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னனி இளம் பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..

குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைத்து நடத்த இருப்பதாகவும்,கோவையில் உள்ள இசை பிரியர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி மாலை ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என நம்பிக்கை தெரிவித்தனர்…

Continue Reading

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Trending