Connect with us

இந்தியா

பீஹார் தேர்தல் முடிவு எந்த மாதிரியான தாக்கத்தை  ஏற்படுத்தப்போகிறது ?

Published

on

பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலைப் பெற்றது . இறுதியில் பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன . மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி பலத்தை பரிசீலிக்கும் தேர்தலாக பீகார் தேர்தல் கருதப்பட்டது. தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பில் பெருபாலான கருத்துக்கணிப்புகள் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியிட்டது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று நிதிஷ் குமார் 10-வது முறையாக பீஹார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றிருந்தால் களம் வேற மாறிருக்க கூடும். ராகுல் காந்தின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் தீவிரமாக இருந்தும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, இந்த இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று பலராலும் சொல்லப்பட்டது . ஆனால் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் வியூக நிபுணராகக் கருதப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி இந்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சியை எதிர்த்து களம் கண்டது. பீகார் முழுவதும் சுமார் 2 ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார் . இருப்பினும் அவரது கட்சியால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .

பீஹார் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துமா ?

தேர்தலை எதிர் நோக்கி காத்திருக்கும் தமிழ்நாடு பீஹார் தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக மக்கள் நல திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது . இதனால் மீண்டும் திமுக ஆட்சியே தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என திமுகவினார் கூறுகின்றனர். ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும் பீகார் முடிவு தமிழகத்தில் எதிர் ஒலிக்கும் என எதிர்க்கட்சியினர் சூளுரைக்கின்றனர். பீஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்குமா ? சீமான், விஜய் நிலைப்பாடு என்ன, கூட்டணிக்கணக்குகள் மாறுமா? எனப் பல கருத்துக்களை பொதுவெளியில் மக்கள் பேசுவதை பார்க்கமுடிகிறது. தாக்கத்தை ஏற்படுத்து எனவும் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஒரு தரப்பும் கூறிவருகின்றனர்.

பீகார் மக்களின் இந்த முடிவு, எதிர்நோக்கும் தேர்தல்களத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதே இப்போதைய ஹாட் டிராபிக்காக வளம் வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Business

நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல் !

Published

on

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி அதன் படி பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது தொழிலாளர் சட்டங்களில் மிகப் பெரிய மாற்றத்தை வெளியுட்டுள்ளது. இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டம் தான். இதன் மூலம் சம்பளம், சமூக பாதுகாப்பு எல்லாம் எளிமையாகும். நம் நாட்டின் தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 ஒருங்கிணைத்து நான்கு சட்டத் தொகுப்புகளாக உருவாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கு பயன்கள் என்ன ?

இந்தப் புதிய சட்ட கட்டமைப்பில் , பல பழமையான விதிகளை சுலபமாக்குவது, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவது, பாதுகாப்பு தரங்களை பலப்படுத்துவது மற்றும் நாட்டின் தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய முறைகளுக்கு கொண்டுசெல்வது ஆகியவற்றை  இலக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது .

 

  • பெண்களுக்கு சம ஊதியம், மரியாதைக்கு உத்தரவாதம்
  • வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பு உருவாக்குதல்
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள்.
  • வேலையில் சேரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள்( அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ).
  • நிலையான கால ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவாதமான பணிக்கொடை.
  • 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனை
  • கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உத்தரவாதம்
  • ஆபத்தான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் உறுதி
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம்
  • சர்வதேச தரநிலைகளின்படி தொழிலாளர்களுக்கு சமூக நீதி உத்தரவாதம்.

வரலாற்று சிறப்புமிக்க நாள் பிரதமர் பெருமிதம் :

இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் : எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Continue Reading

இந்தியா

இனி முன்பதிவு விமான டிக்கெட்டுகளை ரத்து செய்ய புதிய சலுகை-DGCA அறவிப்பு!

Published

on

பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விமான டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்களை செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன்வந்துள்ளது. தற்போதைய DGCA-வின் புதிய அறிவிப்பின்படி, பயணிகள் முன்பதிவு செய்த 48 மணிநேரம் வரை தங்கள் விமான டிக்கெட்டுகளை இலவசமாக ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும். அதாவது, நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து திடீரென உங்கள் திட்டங்களை மாற்றினால், அல்லது தவறான முன்பதிவு செய்தாலோ எந்த ஒரு அபராதம் இல்லாமல் 48 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை மாற்றவும், ரத்து செய்யவும் முடியும்.

Continue Reading

இந்தியா

விண்ணில் பாய்ந்த பாகுபலி!

Published

on

விண்ணில் பாய்ந்த பாகுபலி ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளுடன் பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று (நவம்பர் 2) அதிகாலை நடைபெற்ற முக்கிய நிகழ்வாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தனது LVM3 ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்குவதற்காக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது . விண்ணில் ஏவப்பட்டுள்ள 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மொபைலில் சிக்னல் இல்லை என்ற கவலை வேண்டாம்.. இஸ்ரோவின் புதிய முயற்சி

 

Continue Reading

Trending