Connect with us

கோயம்பத்தூர்

10 ஆண்டுகால, ஆராய்ச்சியின் பலனாய் ‘தமிழ் வழி ஜப்பான் மொழி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.- கருணாநிதி காசிநாதன்

Published

on

இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜப்பானிய மொழியும், தமிழ் மொழியும் ஒரே வேரிலிருந்து துளிர்விட்ட மரங்களைப் போலவே வளர்ந்து நிற்கிறது.
தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கமும், ஜப்பானியர்களின் உணவு பழக்க வழக்கமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஜப்பானியர்களும், தமிழர்களைப் போலவே அரிசி உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற ஒற்றுமைகள் தான், ஜப்பானிய மொழி பயின்று ஜப்பானிய கலாசாரம், பாரம்பரியத்தை பற்றி ஆராய தூண்டியது. ” என தனது முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கருணாநிதி காசிநாதன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிறந்த இவர், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டமும், கணினி அறிவியலில் முதுகலை பட்டமும் முடித்திருக்கிறார். பல உலக நாடுகளில், பல்வேறு பணிகளுக்காக பயணித்தவர், ஜப்பானிலும் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்த காலங்களில் ஜப்பானிய மொழி பயின்று, ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொண்டார்.
” எனக்கு மற்ற உலக நாடுகளை விட ஜப்பான் ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில் அந்நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றம், சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம், தரம் மற்றும் பணியாற்றும் பண்புகள் பாராட்டக் கூடியதாக மொழியிலும் இருந்தன. அதனால் ஜப்பானிய பாரம்பரியத்தை ஆழமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஜப்பானிய மொழியை பயின்ற போது எனக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. அ இ உ ஏ ஐ. . ஆகிய உயிரெழுத்துக்களின் குறில் உச்சரிப்பை போலவே ஜப்பானிய மொழியிலும் இதே போன்ற அடிப்படை இருப்பதைஉணர்ந்தேன்.

அதே சமயம் இலக்கணமும், வாக்கிய அமைப்பும் தமிழோடு நெருக்கமாக இருந்தன. அதனால் ஆங்கில வழி ஜப்பானிய மொழி பயில்வதைவிட, தமிழ் மொழி வாயிலாக ஜப்பானிய மொழி பயில்வது எளிது என்பதை உணர்ந்து அது தொடர்பான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் தயாரித்தேன். 10 ஆண்டுகால, ஆராய்ச்சியின் பலனாய் ‘தமிழ் வழி ஜப்பான் மொழி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். தமிழ் பேசும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழியிலேயே ஜப்பானிய மொழியை புரிந்து கொள்ளவும், ஜப்பானிய மொழி பயிலவும் இந்த புத்தகம் ஏதுவாக இருக்கும்.” என்பவர், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, கலாச்சாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் வலுவான இணைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.

தமிழ் வழியில் ஜப்பானிய மொழி பயிலும் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன், ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
” ஜப்பானிய மொழி அறிவுடன், கல்வி அறிவும் இருந்தால் ஜப்பான் நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். ஏனெனில் ஜப்பான் நாட்டில், இளைஞர்களை விட முதியவர்கள் அதிகம் என்பதால், அங்கு இளைஞர்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. ஆங்கிலம் பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களில் ஜப்பானிய மொழியை முதன்மையானதாக கருதப்படுகிறது. பொறியியல் பட்டம் முடித்தவர்கள், கலை அறிவியல் படித்தவர்கள், ஏன் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு கூட வேலை வாய்ப்புகள் அங்கு நிறைய உள்ளன. பொறியியல் சுகாதாரம் முதியோர் பராமரிப்பு விவசாயம் வாகன உற்பத்தி தொழில்துறை என… 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள தமிழர்கள், ஜப்பானிய மொழியை பயின்றால் மட்டுமே போதும் என்பதுதான் கூடுதல் சிறப்பு” என உற்சாகமாக பேசுபவர், நிறைய தமிழர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல விவசாயம் பயின்றவர்களுக்கும் ஜப்பானில் விவசாய பண்ணைகளில் பணி வாய்ப்புகளை உண்டாக்கி கொடுத்திருக்கிறார்.

” ஜப்பான் பணியாற்றுவதற்கு மட்டுமல்ல படிப்பதற்கும் சிறந்த இடம். ஜப்பான் தற்போது வெளிநாட்டு மாணவர்களுக்கும், திருந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற (coe) எனப்படும் விசா முறையை பயன்படுத்தலாம். இளங்கலை பயிலும் ஆசையோடு ஜப்பான் வருபவர்கள் கட்டாயம் ஜப்பானிய மொழி கற்று இருக்க வேண்டும் அதுவே முதுகலை பட்டமும் ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ள ஜப்பான் வருபவர்களுக்கு ஜப்பானிய மொழி ஒரு தடையாக இருப்பதில்லை ஏனெனில் இங்கிருக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியிலேயே முதுகலை கல்வி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அதனால் மொழி ஒரு தடையாக இல்லாமல் போய் உள்ளது இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகளாவிய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும்.” என்பவர், கல்வி திறன் மேம்பாடு விவசாயம் வேலைவாய்ப்பு கலாச்சார பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்திய ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார் இவரது முயற்சிகளால் பல மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஜப்பானில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

“ஜப்பான் நாட்டிற்கு பழங்களையும் உணவுகளையும் ஏற்றுமதி செய்வதும் நல்ல முயற்சி தான். ஆனால் ஜப்பானியர்கள் தரத்தில் எந்த சமரசமும் செய்வதில்லை. ஏற்றுமதி தொழிலில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். கடுமையான சோதனைகள் இருக்கும். இதற்கெல்லாம் தயாராக இருப்பவர்கள் நிச்சயம் ஜப்பான் நாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.” என ஜப்பான் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் காசிநாதன், ‘கே.சி.சி.எஸ். இண்டோ ஜப்பான்’ என்கிற இன்ஸ்டால் பக்கத்தின் வாயிலாக ஜப்பான் பற்றிய பல்வேறு தகவல்களையும் பல்வேறு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு சம்பந்தமான தகவல்களையும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் தமிழ் வழியில் ஜப்பான் மொழி கற்பிக்கும் முயற்சிகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.ஜப்பான் மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், இவரது சேவைகளுக்கும் பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்து இருக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

எஸ்.என்.ஆர். சன்ஸ் 42-வது நிறுவனர் நாள் விழா

Published

on

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா இன்று (27.02.2026), கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உயர்திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்று 25 ஆண்டுகள் நிறைவு செய்த 30 நபர்களைக் கௌரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, 400 – க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது,

ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. இந்த அறக்கட்டளையைத் தொடங்கியவர்களும், அதில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுபவர்களும் இந்த சமூகத்தில் உருவாக்கிய நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உண்மை இவை போன்ற காரணிகளால் மட்டுமே சாத்தியம். நம் வாழ்வில் முன்னேற மிக முக்கியமானவை தைரியமாக முடிவெடுப்பது. அதனால் தான் என்னால் பெரிய உயரங்களைத் தொட முடிந்தது. குடும்பத்தை நேசியுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். அவர்களால் பெரிய மாற்றங்கள் நிகழும். என்னை என் தாய் நம்பினார்கள். நான் உயர்ந்துவிட்டேன். ஒரு ஆண் வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் வளரும். ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமூகமேs வளரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி திரு. சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! – சூலூரில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

Published

on

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்  உள்ளது, மாற்றுக்  கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

Trending