Connect with us

உள்ளூர் செய்திகள்

ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா

Published

on

ஆதித்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா:-

சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுகுமாரன், செயலாளர் பிரவீன் குமார், அறங்காவலர்-தலைவர் மற்றும் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, இயக்குநர் ஜோசப் வி. தனிக்கல், டீன் ஐ.ராஜேந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

சென்னையைச் சேர்ந்த CHRO தலைமை அதிகாரி மற்றும் மென்பொருள் பொறியாளர் சசிகாந்த் ஜெயராமன் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம், இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தில் கணினியின் பங்கு மற்றும் அவரது தொழில்முறை பயணத்திலிருந்து பெற்ற பாடங்களை எடுத்துரைக்கும் ஒரு ஊக்கமளிக்கும் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தமிழின் பெருமையை அறிய கோவையில் கூடும் வடமாநில மாணவர்கள்

Published

on

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வித்யா பாரதி உச்ச கல்வி சன்ஸ்தான் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “லெர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” தொடங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள், தமிழ்மொழி, அதன் தொன்மை, பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 10 நாள் பயிற்சி முகாமான “லேர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” (Learn Bharatiya Bhasha Internship Programme 2.0) இரண்டாம் பதிப்பில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SKASC) வந்தடைந்துள்ளனர்.இந்தப் பயிற்சி திட்டத்தை கல்லூரி நிர்வாகம், வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனம் மற்றும் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. கனகசபாபதி கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“மொழி என்பது சமூகங்களுக்கிடையே கருத்துகள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு பாலமாக விளங்குகிறது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியப் பண்பாட்டின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் செழுமையான இலக்கிய மரபைக் கொண்டுள்ளது.

சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழ் இலக்கியம், நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல மொழிகளைக் கற்றுக்கொள்வது சிக்கல்களைத் தீர்க்கும் திறன், சூழலுக்கு ஏற்ப தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் பண்பாட்டு புரிதலை மேம்படுத்துகிறது. பன்மொழித் திறன், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது தாய்மொழியைத் தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது” என்றார்.

வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனத்தின் தேசிய அமைப்புச் செயலாளரும் சிறப்பு விருந்தினருமான கே.என். ரகுநந்தன், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கவுன்சிலின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. சுந்தரமூர்த்தி விளக்கமளித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகளவில் தமிழ்ப் பாரம்பரியம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பதோடு, இத்தகைய திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும் பண்பாட்டு புரிதலையும் மேம்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெகஜீவன் வரவேற்புரை ஆற்றி, “மாணவர்கள் தமிழை ஒரு மொழியாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகத்தின் அடையாளமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆர். விஜயசமுந்தேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் வி.ஜி.எம் மருத்துவமனை நடத்தும் “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டி

Published

on

கோவை மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறந்து பணியாற்றி வருகின்ற வி.ஜி.எம் மருத்துவமனையும், விளையாட்டு துறையில் கால் நூற்றாண்டை கடக்கும் கோவை அத்லெடிக் கிளப்பும் இணைந்து “ரன் ஃபோர் நேசன்” மாராத்தன் ஓட்டத்தை இந்தாண்டும் நடத்துகிறோம். இந்த மாராத்தான் கடந்த தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு மிக்க மாராத்தான் போட்டியை 9.8.2026 நேரு விளையாட்டு அரங்கில் வி.ஜி.எம் “ரன் ஃபோர் நேசன்” என்ற தலைப்பில் மீண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த மாராத்தான் முக்கிய நோக்கம் ஒரு தேசம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம் இந்த மூன்றும் சிறப்பாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் “ரன் ஃபோர் நேசன்” எதற்காக நடத்தப்படுகிறது என்ற தலைப்பு வெளியிடப்படும் இந்த ஆண்டு “ரன் ஃபோர் நேசன்” மற்றும் போதையில்லா கோவை என்பதை வலியுறுத்தி 9.8.2026 அன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை சார்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு இன்று 13.6.2026 வி.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் 6-வது “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டியின் சீருடை வெளியீட்டு விழா மற்றும் அரசு. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலனிகள், அரசு பள்ளிகளுக்கு கணணி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.K.S. ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.N.M. சுகுமார் அவர்கள் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பல்வேறு ரன்னர்ஸ் கிளப் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை மொத்தம் ரூ. 2,00,000 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள், சீருடை, உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாரத்தானாக நடைபெற உள்ளது.

Continue Reading

Trending