Connect with us

நிகழ்ச்சிகள்

தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி

Published

on

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.மார்ச் 28 முதல் 31,2025 வரை ஹரியானாவில் நடைபெற்ற 21வது மூத்த, ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எலீட் டவுன்ஹில் (Downhill) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் திலோத்தம்மா.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சித்தாபுதூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் திலோத்தம்மா மற்றும் அவர் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கலந்துகொண்டனர்.இந்த அதிக ஆபத்தான டவுன்ஹில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான். இந்த பிரிவு மிகவும் கடுமையானது; நாட்டில் ஏறத்தாழ 3-4 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள், என அவரின் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கூறினார்.

இந்த டவுன்ஹில் போட்டி ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் எனும் பரந்த மலைப்பகுதியில் மிகவும் சவாலான பாதையில் நடைபெற்றது. வழக்கமான 1 கி.மீ பாதையைவிட இந்த வருடம் 2 கி.மீ தூரம் கொண்ட டிராக், வீரர்களின் திறமைக்கு சவாலாக விடும் விதத்தில் இருந்தது என திலோத்தம்மா கூறினார்.மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தன்னுடன் போட்டியிட்ட நிலையில், திலோத்தம்மா 5 நிமிடம் 45 வினாடிகளில் அந்த 2 கி.மீ. தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கபாதகத்தை தட்டிச்சென்றார்.

“ டவுன் ஹில் சைக்ளிங் போட்டிகளில் கடுமையான பாதைகள் இருக்கும். அதை கடப்பது பற்றி முடிவுகளை நாம் சிறிது நேரத்திலேயே எடுக்கவேண்டும். எனவே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த கவனமும் தைரியமும் தேவைப்படுத்தியது,” என்கிறார் திலோத்தம்மா.வேலூரைச் சேர்ந்த இவரை இவரின் தாய் மட்டுமே உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார். சைக்ளிங் மீது பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் டவுன் ஹில் போட்டிக்காக கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மலைபகுதிகளில் பயிற்சி செய்ய கட்டுப்பாடுகள் இருப்பதால், தனியார் எஸ்டேட்டில் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டதாக அவரும் அவரின் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.

தன்னுடைய வெற்றிக்கு தன் தாய், பயிற்சியாளர் கோகுல், தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன், மற்றும் கோவை நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஆதரவு காரணம் என கூறுகிறார்.“தமிழ்நாடு சைக்கிள் அசோசியனில் இருந்து புள்ளிகள் கிடைத்ததும், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற வாய்ப்புள்ளது. போதிய ஆதரவு கிடைத்தால், உலக மேடைகளில் வெற்றி பெற்று என் மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,” என்கிறார் திலோத்தம்மா.

தன்னுடைய சைக்கிளைப் பற்றிக் கூறும் போது,“சுயமாக ஒரு டவுன்ஹில் சைக்கிள் வாங்க முடியவில்லை. சர்வதேச போட்டிக்கு தேவையான ஆரம்பநிலை சைக்கிள் ரூ.2-3 லட்சம் ஆகும். அதுவே நவீன வகை சைக்கிள் வாங்க ரூ.7-8 லட்சம் வரை செலவாகும். அதை வாங்க இயலவில்லை. இந்த முறை என் பயிற்சியாளர் தன்னுடைய சைக்கிளை எனக்காக கொடுத்தார். இந்த விளையாட்டில் மேலும் உயரம் தொட நான் ஸ்பான்சர்களின் ஆதரவை நாடுகிறேன்” என்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நிகழ்ச்சிகள்

லட்சத்தை தாண்டிய தங்கம் விலை! குடும்ப பட்ஜெட்டில் சுமை – வருத்தத்தில் இல்லத்தரசிகள்

Published

on

நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி, இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,00,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ஏற்றம் காணும் தங்க விலை, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை பல ஆயிரம் ரூபாய்கள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், புவியியல் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும், மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக வாங்கி சேமித்து வருவதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Continue Reading

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published

on

கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி   இந்திய தொழில்கள் கூட்டமைப்பு   உடன் இணைந்து DX-EDGE (Digital Excellence for Growth and Enterprise) எனப்படும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை வளாகத்தில் அறிமுகப்படுத்தியது. இந்திய ஒப்பந்தப் பத்திரம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான மலர்விழி அவர்கள் மற்றும் அறங்காவலர் ஆதித்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. MoU பரிமாற்றத்தை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன் அவர்கள் முன்னிலையிலிருந்து மேற்கொண்டார். ஒப்பந்தத்தில் கல்வி குழும தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சி.ஐ.ஐ. கோயம்புத்தூர் மண்டல முன்னாள் தலைவர் கணேஷ்குமார் பேசுகையில், நமது நாட்டில் சிறு, குறு துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது, வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம், சி.ஐ.ஐ. யின் துணை இயக்குனர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ்,DX-EDGE’ன் முதன்மை ஆலோசகர் மதுவசந்தி உள்ளிட்டோர், இவ்வமைப்பின் நோக்கத்தை விளக்கினர்.

நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ-., துணை இயக்குனர் ஷிம்னா, கோயம்புத்துர் மண்டல நிர்வாக அதிகாரி சாய்சரண், முதல்வர் பொற்குமரன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Continue Reading

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

Published

on

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது.

இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு , மற்றும் பாலி-ட்ராமா எனும் ஒரே நபருக்கு உடலின் பல இடங்களில் ஏற்பட்ட ஆபத்தான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு என்.ஏ.பி.ஹெட்ச். (மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் சர்வதேச தரத்துடன் ஒப்பிடக்கூடிய உயர்-துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும்.

இந்த 24 மணிநேர சேவை என்பது 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவர்கள் மற்றும் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சையில் பயிற்சி பெற்ற 40 அவசர செவிலியர்கள் உட்பட, ஒருங்கிணைந்த, பல்துறை அவசர சிகிச்சைக் குழுவால் இயக்கப்படுகிறது.

இத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட லைஃப் சயின்ஸ் ஆம்புலன்ஸ் நெட்வொர்க் மூலம், மருத்துவமனைக்கு நோயாளி அழைத்துவரப்படும் போதே அவரின் பாதிப்பு நிலையின் தீவிரத்தன்மையை சீராக்க பிரத்தியேக மருத்துவ வசதிகள் மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் இடன்பெற்றுள்ளன.

இந்த புதுமையான அமைப்பு, அவசர சிகிச்சைப் பிரிவில் அமைந்துள்ள இம்மருத்துவமனையின் அதிநவீன ஸ்மார்ட் கண்காணிப்பு மையம் மூலம், நோயாளிகளை நிகழ்நேர கண்காணிப்பில் வைத்திருக்கும்.
இந்த ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே, நோயாளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கான மூன்று அடுக்கு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நவீன மறுஉயிரூட்டல் அறைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கிற்கான வசதிகள் ஆகியவை உள்ளன. இது வேகமாக பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையில் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

Continue Reading

Trending