Connect with us

விளையாட்டு

பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது!

Published

on

நேற்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டூ-ஆர்-டை ஐபிஎல் 2024 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து பிலே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங்க தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆர்சிபி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவிய பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிளேஆஃப்களுக்குள் நுழைய. டு பிளெசிஸ் தலைமையிலானராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பல விஷயங்களைச் செய்யது வெற்றிக்கு கடுமையாகப் போராடியது. ரன்கள் குவிப்பது, அக்ரோசமாக பீல்டிங் செய்வது, முக்கிய தருணங்களில் சிறப்பாக பந்து வீசுவது என பல போராட்டங்களை நடந்தி வெற்றிகொண்டது. குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சிஸ்கே பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சிறப்பாக பந்துவீசிய தயாள் வெற்றியைத் தேடித்தந்தார்.

நம்பமுடியாத ஒரு இரவு :

நம்பமுடியாத ஒரு இரவு! மற்றும் ஒரு சிறந்த வெற்றியுடன் பெங்களூரில் முடித்து மகிழ்ச்சி அளிக்கிறது மழை இடைவேளை முடிந்து திரும்பி வந்த பிறகு நானும் விராட்டும் 140-150 நல்ல ஸ்கோர் என என்று பேசிக் கொண்டிருந்தோம். 200 ரன்களை எடுத்தது நம்பமுடியாததாக இருந்தது. கடந்த 6 ஆட்டங்களில் பேட்டர்கள் நல்ல நோக்கத்துடனும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடனும் பேட்டிங் செய்தனர்.ஈரமான பந்தில் நாங்கள் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது, இந்த ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. இதற்கு அவர் தகுதியானவர். முதல் பந்தில் யார்க்கர் வேலை செய்யவில்லை, பின்னர் நடந்தது சிறப்பானதாக அமைந்தது தொடர்ச்சியாக 6 ஆட்டங்களை வெற்றியை சிறப்பானது. எங்களின் முதல் இலக்கு நாக் அவுட்களுக்குள் நுழைவதுதான், அதைச் செய்துள்ளோம்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை

டென் டென் செஸ் அகாடமி – 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி 2026

Published

on

டென் டென் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி, 2026 பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 120 கோப்பைகளும், 40 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், மிக இளம் வயது பங்கேற்பாளருக்கும், சிறப்பாக செயல்பட்ட சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, தனிநபர் திறமைகளும் இளையோர் சதுரங்க வளர்ச்சிக்கு அளித்த நிறுவன பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

இந்தப் போட்டி, 7 வயதுக்குட்பட்டோர் (U7), 9 வயதுக்குட்பட்டோர் (U9), 11 வயதுக்குட்பட்டோர் (U11) மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் (U13) ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

U7 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த தக்ஷிணேஸ்வர் S. P. 5.5/6.0 புள்ளிகளுடன் U7 ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த சம்யுக்தா P. 5.0/6.0 புள்ளிகளுடன் U7 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U9 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த த்ரிஷாந்த் P. 5.5/6.0 புள்ளிகளுடன் U9 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரகதி 5.0/6.0 புள்ளிகளுடன் U9 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U11 பிரிவு:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹர்ஷா வர்தன் S. 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U11 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த லக்ஷிதா M. 5.0/5.0 புள்ளிகளுடன் U11 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U13 பிரிவு:

செங்கல்பட்டையைச் சேர்ந்த நவ்நீத் கலியப்பெருமாள் 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U13 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த மேஹநேத்ரா M. 4.0/6.0 புள்ளிகளுடன் U13 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

பரிசுகளை ஸ்ரீ ஐயப்பா பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், டென் டென் செஸ் அகாடமி தலைவர் திரு. S. R. ஜனகிராமன், இணைச் செயலாளர் திருமதி கோமதி மற்றும் டென் டென் செஸ் அகாடமியின் திருமதி விஜி ஆகியோர் வழங்கினர். மேலும், மேடையில் போட்டி அமைப்பாளர் திரு. S. J. அமர்நாத் மற்றும் முதன்மை நடுவர் திருமதி I. A. S. கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

விளையாட்டு

மாநில அளவிலான 12-வது குழந்தைகள் சதுரங்கப் போட்டி பிப்.15-ல் சென்னையில் நடைபெறுகிறது

Published

on

டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12-வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் (TNSCA) அனுமதியுடன், சிறீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் வளாகத்தில் நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் 7, 9, 11 மற்றும் 13 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்கள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள், சிறுமிகள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காலை 8.45 மணிக்குள் அறிக்கை செய்ய வேண்டும். போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும். மாலை 5.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே சதுரங்கத்தில் மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத்திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டென் டென் செஸ் அகாடமி நிர்வாகி அமர்நாத் தெரிவித்தனர்.

போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு +91 84382 21095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

விளையாட்டு

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கதின் 67வது ஆண்டுவிழா

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சிடிசி ) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக கொண்டாடியது

இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார் . இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் டி.லஷ்மி நாராயணசாமி, கௌரவ செயலாளர் ஆர்.சந்திர மௌளி, துணைத் தலைவர்கள் ஆர்.சுந்தர், என்.நாராயணன் மற்றும் கே.ஆர். தினேஷ், இணைச் செயலாளர்கள் கே. மகாலிங்கம் மற்றும் சுரேஷ் குமார், பொருளாளர் சுந்தர் ஆகியோர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

வர்கள் தங்கள் உரையில், அடித்தள மட்டத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டியதுடன், மாநில மற்றும் தேசிய கிரிக்கெட்டில் கோவையின் சிறப்பான பங்களிப்பையும் குறிப்பிட்டனர். திறமையான வீரர்களை கண்டறிதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சிறப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

Continue Reading

Trending