Connect with us

Entertainment

80களில் காதல் காவியமான டி ஆர் பாடல்கள்! மாஸ் ஹிட் அடித்த

Published

on

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.

1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.

தட்டி தூக்கிய டிஆர் :

இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.

இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.

சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .

வெற்றி நாயகன் :

சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.

80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.

இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending