Connect with us

Sports

வருகிறதா ஐபில் 2025 காண மெகா ஆக்ஷன்! வீரர்களை தக்கவைக்க முடியுமா ?

Published

on

2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வில்லை .

2022 ஐபிஎல் மெகா ஏலத்தில், அதிகபட்சமாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை அணிகளுக்கு ஐபில் நிர்வாகம் வழங்கியது. நான்கு வீரர்களும் 3 இந்தியர்கள் + 1 வெளிநாட்டு அல்லது 2 இந்தியர்கள் + 2 வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்பது விதி .தற்போது வீரர்களை தக்கவைத்துக் கொள்வதின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றாலும்,  இதில் மூன்று இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியினர் தக்க வைக்க முடியும் வெளிநாட்டு வீரர் 2 பேரை தக்க வைக்க முடியும் கூறப்படுகிறது.

இதற்கு பல அணிகள் ஆதரவு தெரிவித்தாலும் சில அணிகள் எதிர்க்கின்றனர்,காரணம் முக்கியமாக வீரர்கள் ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுத்து வாங்க நேரிடும். குறிப்பாக சென்னை, மும்பை இதற்கு எதிராகவே இருக்கும். ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் 3 வீரர்களுக்கு மேல் கொடுத்தால் அணியில் பெரிதான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்கவைப்பதை விரும்பவில்லை.

அதிகபட்ச 3 இந்திய வீரர்கள் என்ற கணக்கில் மட்டுமே தக்க வைக்க முடியும் என்றால், அது சில அணிகளுக்கு மகிழ்ச்சியானதாக அமையும். உதாரணமாக ராஜஸ்தானை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோரை தக்க வைக்க விரும்பும் காரணம் இவர்களை ஏலத்தில் விட்டால் மீண்டும் எடுப்பது கடினம் அதுமட்டும் இன்றி அதிக தொகைக்கு வாங்க நேரிடும். மற்ற அணிவீரர்களை ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுக்க நேரிடும்.

பஞ்சாப் கிங்ஸ் :

இந்த அணிக்கு தக்க வைக்க பெரிய அளவில் வீரராகள் இல்லை என்றாலும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மாவும் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர்களை தாண்டி வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கம் வாய்ப்பு சாம் கரண் மற்றும் ககிசோ ரபாடா இருக்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் முதலில் தக்கவைக்க விரும்பும் நபராக ஷுப்மான் கில் இருப்பார். இவரது சிறப்பான ஆட்டமும் கேப்டனனாக செயல்படும் முறையுமே முதல் வாய்ப்பாக இருக்கிறது. மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதை ஏற்கன

வே காட்டியுள்ளார். ஷுப்மான் கில் தவிர, முகமது ஷமியையும் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற வாய்ப்புகள் கேன் வில்லியம்சன், ரஷித் கான் ஆக இருக்கலாம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நீக்க முடியாத பெயராக வளம் வருவது விராட் கோலியின் பெயர். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் .இவரை தவிர இந்திய வீரர்களை தக்க வைக்க நிர்வாகம் விரும்புமா என்பது கேள்விக்குறிதான். 2024 சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ், மட்சுவெல் ஆகியோர் இடம்பெறலாம்

டெல்லி கேப்பிட்டல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் பொறுத்த மட்டில் விபத்து காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ரிஷப் பண்ட், 2024 சீசனில் மீண்டும் கேப்டனாக ப

தவியேற்று நடத்தி வருகிறார் இதனால் இவரது பெயர் முதலில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இவரைத் தவிர அக்சர் படேல், குலதீப் யாதவ் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள நிர்வாகம் விரும்பும் . டெல்லி அணி வெளிநாட்டு வீரர்கள் இடப்பெற கூடும் என எதிர்பார்பது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், மிட்செல் மார்ஷ் .

மும்பை இந்தியன்ஸ்:

அனைத்து தொடரில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2024 ஆம் தொடரில் தடுமாறி வருகிறது.ஐபிஎல் 2025க்கான வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகப்பெரிய தலைவலியைக் காணும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பை தக்கவைக்கப்படலாம், இவரைத் தவிர சூரியகுமார், பும்ப்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள். ரோஹித் ஷர்மா தக்கவைப்பது அவரது முடிவில் தான் இருக்கிறது. டிம் டேவிட் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2025 க்கு தக்கவைக்கப்படும் முதல் நபராக இருப்பது கேஎல் ராகுல் . கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என பல பொறுப்புகளை வைத்துள்ளார். இவரை தாண்டி இந்திய அணி வீரர்களில் ரவி பிஷ்ணோய் மயங்க் யாதவ் இடம்பெறலாம். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பெற வாய்ப்பு பூரான்,ஸ்டோனிஸ் இருக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

வரும் 2025 ஆவது ஐபிஎல் தோனி இல்லாத ஐபிஎல்லாக இருக்க கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில்
ஐபிஎல் 2025 க்கு சிஎஸ்கே தக்கவைக்கும் முதல் பெயர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகும். ருத்துராஜ் தவிர, பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே தக்க வைத்துக் கொள்ள விரும்பும். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் மெயின் அலி, பதிரான கிடைக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பெரும்பாலும் ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், வருண் சக்கரவத்தி ஆகியோரைத் தக்க வைத்துக் விரும்பும். மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டும். இந்த அணியில் முக்கிய வெளிநாட்டு வீரர்களாகப் பார்க்கப்படுவது ரஸ்செல், நரேன், ஆகியோரை தக்க வைக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இறுதியாக, 2024 சீசன்னில் சிறப்பாக விளையாடுவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய வீரர்கள் பெரிதாக இல்லை அபிஷேக் ஷர்மாவைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்புக் காட்டும். வெளிநாட்டு வீரர்களான ஃபினிஷர் ஹென்ரிச் கிளாசென் துவக்க அதிரடி வீரர் ஹெட் ஆகியோரை தக்க வைக்கும்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி! – சிராஜ், பும்ரா, ராகுல் அசத்தல் !

Published

on

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக டேகனரைன் சந்தர்பால் – ஜான் கேம்ப்பெல் ஜோடி களமிறங்கி மட்டையைச் சுழற்றினர். இதில் டேகனரைன் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்ப்பெல் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்தில் இருந்த அலிக் அதானாஸ் – பிராண்டன் கிங் ஜோடியில் பிராண்டன் கிங் 13 ரன்னிலும், அலிக் அதானாஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் 12 ஓவரில் 42 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது தவித்தது வெஸ்ட் இண்டீஸ். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் – ஷாய் ஹோப் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். அடுத்த 10 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்த ஜோடியில்  ஷாய் ஹோப் 26 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் 4 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும், குலதீப் 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

 

இந்தியா பேட்டிங்

தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல் ராகுல் மட்டையைச் சுழற்றி வருகிறார்கள்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ்: டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.

நேரலை ஒளிப்பரப்பு 

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அதன் இணைய பக்கத்தில் நேரலையில் பார்த்து மகிழலாம்.

Continue Reading

Sports

ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா.

Published

on

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 9வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்த தொடரில் இரு அணிகளும் பல முறை மோதியுள்ள நிலையில், இந்தியா மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபித்தது. குழு சுற்று, சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என மூன்றிலும் இந்திய அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை தகர்த்தது.

இந்த வெற்றி மூலம் ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியதோடு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர்களின் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் திறமைகள் ஒருங்கிணைந்த ஆட்டமாக வெளிப்பட்டு, இறுதியில் பட்டம் இந்தியாவுக்கு சென்றது.

Continue Reading

Sports

IND vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – 3 தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

Published

on

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதிய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருப்பது மாநில ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளங்கி வந்த ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இத்தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக, முதல் நிலை விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக வீரர் நாராயண ஜெகதீசனுக்கும் இடம் கிடைத்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஜெகதீசன், சமீபத்திய துலீப் போட்டியில் முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் குவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் எடுத்திருந்தார். அவரின் சிறப்பான பார்மை கருத்தில் கொண்டு இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சனும் அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிராக அவர் 73 ரன்கள் அடித்திருந்தார். இதனால் செட்ஜர் புஜாராவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனுபவம் வாய்ந்த ஆஃப்ஸ்பின்னர் ஆர். அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்ப உள்ளார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் – நாராயண ஜெகதீசன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் – ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

Continue Reading

Trending