Connect with us

விளையாட்டு

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்

Published

on

எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய 6 அணிகள் பங்கேற் பங்கேற்கிறது . இந்தியா, கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு முன்னணி ஆசிய ஹாக்கி அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றன.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடக்க ஆட்டத்தில் வியாழக்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மக்கள் குடியரசை எதிர்கொள்கிறது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடக்க ஆட்டத்தில் வியாழக்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்சீனாவை எதிர்கொள்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது .

7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் தி பால் – கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள்முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

சென்னை

டென் டென் செஸ் அகாடமி – 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி 2026

Published

on

டென் டென் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி, 2026 பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 120 கோப்பைகளும், 40 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், மிக இளம் வயது பங்கேற்பாளருக்கும், சிறப்பாக செயல்பட்ட சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, தனிநபர் திறமைகளும் இளையோர் சதுரங்க வளர்ச்சிக்கு அளித்த நிறுவன பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

இந்தப் போட்டி, 7 வயதுக்குட்பட்டோர் (U7), 9 வயதுக்குட்பட்டோர் (U9), 11 வயதுக்குட்பட்டோர் (U11) மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் (U13) ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

U7 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த தக்ஷிணேஸ்வர் S. P. 5.5/6.0 புள்ளிகளுடன் U7 ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த சம்யுக்தா P. 5.0/6.0 புள்ளிகளுடன் U7 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U9 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த த்ரிஷாந்த் P. 5.5/6.0 புள்ளிகளுடன் U9 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரகதி 5.0/6.0 புள்ளிகளுடன் U9 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U11 பிரிவு:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹர்ஷா வர்தன் S. 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U11 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த லக்ஷிதா M. 5.0/5.0 புள்ளிகளுடன் U11 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U13 பிரிவு:

செங்கல்பட்டையைச் சேர்ந்த நவ்நீத் கலியப்பெருமாள் 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U13 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த மேஹநேத்ரா M. 4.0/6.0 புள்ளிகளுடன் U13 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

பரிசுகளை ஸ்ரீ ஐயப்பா பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், டென் டென் செஸ் அகாடமி தலைவர் திரு. S. R. ஜனகிராமன், இணைச் செயலாளர் திருமதி கோமதி மற்றும் டென் டென் செஸ் அகாடமியின் திருமதி விஜி ஆகியோர் வழங்கினர். மேலும், மேடையில் போட்டி அமைப்பாளர் திரு. S. J. அமர்நாத் மற்றும் முதன்மை நடுவர் திருமதி I. A. S. கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

விளையாட்டு

மாநில அளவிலான 12-வது குழந்தைகள் சதுரங்கப் போட்டி பிப்.15-ல் சென்னையில் நடைபெறுகிறது

Published

on

டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12-வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் (TNSCA) அனுமதியுடன், சிறீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் வளாகத்தில் நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் 7, 9, 11 மற்றும் 13 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்கள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள், சிறுமிகள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காலை 8.45 மணிக்குள் அறிக்கை செய்ய வேண்டும். போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும். மாலை 5.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே சதுரங்கத்தில் மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத்திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டென் டென் செஸ் அகாடமி நிர்வாகி அமர்நாத் தெரிவித்தனர்.

போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு +91 84382 21095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

விளையாட்டு

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கதின் 67வது ஆண்டுவிழா

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சிடிசி ) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக கொண்டாடியது

இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார் . இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் டி.லஷ்மி நாராயணசாமி, கௌரவ செயலாளர் ஆர்.சந்திர மௌளி, துணைத் தலைவர்கள் ஆர்.சுந்தர், என்.நாராயணன் மற்றும் கே.ஆர். தினேஷ், இணைச் செயலாளர்கள் கே. மகாலிங்கம் மற்றும் சுரேஷ் குமார், பொருளாளர் சுந்தர் ஆகியோர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

வர்கள் தங்கள் உரையில், அடித்தள மட்டத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டியதுடன், மாநில மற்றும் தேசிய கிரிக்கெட்டில் கோவையின் சிறப்பான பங்களிப்பையும் குறிப்பிட்டனர். திறமையான வீரர்களை கண்டறிதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சிறப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

Continue Reading

Trending