போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில், கோயம்புத்தூர் கிராஸ் கட் சாலையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி அதன் மாணவர் நல வாரியம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தொடங்கிவைத்தார். இப்பேரணி போதைப்பொருளுக்கு இல்லை என்று சொல்வோம், ஒன்றிணைந்து போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது.
இப்பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அகாடமி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் காந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பேரணியின் முடிவில், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் வாசிக்க, திரண்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் என். கண்ணன், மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி. ஜெகதீஸ்வரி, R.S. அருண், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கோவை கிளை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்,
போதை நல்லது என யாராவது சொல்வார்களா ? அனைவருக்கும் தெரியும் போதைப்பொருள் பயன்படுத்துவது தவறான பழக்கம் மற்றும் அதனால் பாதிப்புக்கள் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் என்று. அனால் ஒரு ஆர்வத்தில் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கலாம் என செய்வதுதான் அதற்க்கு அடிமையாகி விடுகிண்றனர். போதைப்பழக்கம் என்பது ஒரு பேயை போன்றது. இளைஞர்கள் ஒரு தடவை செய்தால் அது நம்மளை பிடித்துக் கொள்ளும் . ஒரு தடவை கூட நீங்கள் எடுத்துக்கொள்ளமல் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் . போதை பொருள் பயன்படுத்துவது ஒரு சமூக குற்றம் ஆகும். போதை எங்காவது இருந்தால் இலவச புகார் எண்ணிற்கு உடனடியாக காவல்துறைக்கு தெரிவியுங்கள் , உங்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அனைவரும் இதுபோன்ற செய்தால் போதையை ஒழித்து விடலாம் என தெரிவித்தார்.
மேலும் சிவில் சர்விஸ் படிப்பதை விட முக்கியமானது இந்த போதை பழக்கவழக்கம் இல்லாமல் இருப்பது ஆகும். ஏனெனில் இந்த உலகத்தில் இந்த வேலை இல்லை என்றாலும் வேறு வேலை செய்துகொள்ளலாம். ஆனால் போதை பொருள் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும். யாரும் போதை பொருள் பயன்படுத்தித்தார்கள் , பயன்படுத்தவும் விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி. ஜெகதீஸ்வரி ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.