செய்திகள்

200 இடங்களில் வெற்றி தமிழகத்தை ஆள்வார் – செங்கோட்டையன்

Published

on

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்,கருத்துகணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்த அவர்,
தந்தி ஆன்லைன் நடத்திய கருத்து கணிப்பில் 250808 பேரிடம் கருத்து கணிப்பு எடுத்து இருக்கிறார்கள்,ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில் 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள்,
மற்றவர்கள் அதற்கு கீழே இருக்கும் சொல்லி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும்இலங்கை, நேபாள், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும்கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது என தெரிவித்தார்.மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும் எனவும், பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் , அடுத்ததாக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது என தெரிவித்தார்.200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார்,இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று எனவும் தெரிவித்தார்.கருத்துக்கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்?என கேள்வி எழுப்பிய அவர்  டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது என தெரிவித்தார். இதனைதொடர்ந்து விமானம் மூலம் அவர் சென்னை கிளம்பினார்.

Click to comment

Trending

Exit mobile version