செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Click to comment

Trending

Exit mobile version