கோயம்பத்தூர்

ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் பரிசோதனை

Published

on

கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14, 2026 வரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, கோயம்புத்தூரில் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம்முன்னெடுக்கும் உலகளாவிய முயற்சியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழுமையான பார்வை இழப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு குளுக்கோமா இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் குளுக்கோமா சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவும் குளுக்கோமா அறுவை சிகிச்சை முக்கிய முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது.உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் iStent, KDB Glide, GATT மற்றும் MINIJECT போன்ற புதிய MIGS சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500 க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Click to comment

Trending

Exit mobile version