உள்ளூர் செய்திகள்

அன்னூரில் நடைபெற உள்ள மாபெரும் விவசாய & கோழிப்பண்ணை கண்காட்சி – Agri & Poultry Expo 2026.

Published

on

கோவை மாவட்டம் அன்னூரில், விவசாயிகளின் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் Agri & Poultry Expo–2026 எனும் மாபெரும் விவசாய மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி Pride Events நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சி, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை தொழில்களில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கண்காட்சியில், நவீன டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், விதை மற்றும் உர வகைகள், பாசன உபகரணங்கள், ட்ரோன் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பங்கள், சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணை வளர்ப்புக்கான நவீன உபகரணங்கள், தீவன மேலாண்மை முறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள், உற்பத்தி திறன் மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து நிபுணர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. விவசாயிகள் நேரடியாக நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்ய விரும்பும் தொழில்முனைவோர்கள், இளம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த கண்காட்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சிக்கான மீடியா பார்ட்னராக தினஇதிகை செயல்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9384265548, 9384177789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Click to comment

Trending

Exit mobile version