செய்திகள்

இளைஞர் மேம்பாட்டில் தமிழன் சிறகுகள்

Published

on

சென்னை: இங்கிலாந்தின் The Duke of Edinburgh’s International Award Foundation (DofE) கீழ் இந்தியாவில் இயங்கிவரும் The International Award for Young People (IAYP) அமைப்புடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை இன்று (26.06.2026) அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

சென்னையில் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் Award Leader Training Programme-இல் தமிழன் சிறகுகள் அறக்கட்டளையின் திரு. வா. ஜோதிகிருஷ்ணா மற்றும் செல்வி. க. ஆர்த்தி பங்கேற்று, அதிகாரப்பூர்வ Award Leader அங்கீகாரத்தை பெற்றனர்.

பயிற்சியின் நிறைவு விழாவில், தமிழன் சிறகுகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. அ. தினேஷ் ராஜா மற்றும் ஆலோசனைக் குழு துணைத் தலைவர் முனைவர். ஓ. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, IAYP தேசிய இயக்குநர் திரு. கபில் பல்லா அவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழன் சிறகுகள் அறக்கட்டளை இளைஞர்களின் தலைமைத்திறன், சமூகப் பொறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் தனிமனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் International Award for Young People (IAYP) திட்டத்தை தனது செயல்பாட்டு மையங்கள் மூலம் முன்னெடுக்கவுள்ளது.

Click to comment

Trending

Exit mobile version