சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் நடத்திவருகிறது . கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு 20ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சூலூர் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி 98,99 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சூலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் வைஸ் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி நவீன், தனபால், பிரவீன், கிளைச் செயலாளர் சண்முகம், கருப்புசாமி, முருகேஷ்,BLA2 துரை (எ) சதாசிவம், மனோஜ், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேபோல 18ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செட்டிபாளையம் பேரூராட்சி பாகம் எண் 177, சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் இடையர்பாளையம் ஊராட்சி பாகம் எண் 269 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.