உள்ளூர் செய்திகள்

அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS முகாம் நிறைவு !

Published

on

அன்னூர், அக்.3: அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி  2ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வந்தனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்றது பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், கண் சிகிச்சை முகாம், புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் காவல் நிலையம், பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நேற்று காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்னூர் பேரூராட்சி அலுவலத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு தீயணைப்புத்துறையினரின் ஆபத்துகால மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இது தொடர்ந்து மாலை முகாம் நிறைவு விழா நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், சுமதி, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாமை செயல்படுத்தினர்.

அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் அன்னூர் காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

Click to comment

Trending

Exit mobile version