உள்ளூர் செய்திகள்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக்கான நிறுவனம் விருது!

Published

on

பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (NITTTR) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், இந்த விருதை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 58 வது ஆண்டு விழாவில் பெற்றுக்கொண்டது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ம.அசோக் மற்றும் விரிவுரையாளர் G.கதிரேஸ்குமார் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ம.மாணிக்கம் மற்றும் தலைவர் மா.ஹரிஹரசுதன் ஆகியோர் இச்சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Click to comment

Trending

Exit mobile version